Author: Porulaathaaram Post

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறவுள்ளது. இந்த புயலுக்கு ஃபெங்கால் என பெயரிடப்படும். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக தெரிவித்தார். இது நாளை மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெறக்கூடும் எனவும், இதனால் அடுத்த வரும் 24 மணி நேரத்திற்கு மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் என தெரிவித்தார். இதையடுத்து, அப்பகுதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக கடலூர் பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புயல் முன்னெச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட ஆறு மாவட்ட…

Read More

2023 ஆண்டில் உலகம் முழுவதிலும் நாளொன்றுக்கு 140 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது துணைவராலோ அல்லது குடும்ப உறுப்பினர்களாலோ கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலும் குடும்பத்தினராகவோ, தெரிந்தவராகவோ உள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஒட்டி, ஐநாவின் பெண்கள் மற்றும் போதைப்பொருள், குற்றச்செயல்கள் தடுப்பு அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது . அதன்படி, சர்வதேச அளவில் 2023-ம் ஆண்டில் சராசரியாக 51,100 பெண்கள் மற்றும் சிறுமிகளின் மரணத்திற்கு குடும்ப உறுப்பினர்களே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இது ஒரு நாளைக்கு 140 பெண்கள் வீதம் ஆகும். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிக ஆபத்தான இடம் அவர்களது வீடுதான் என்று ஐநா அறிக்கை கூறியுள்ளது. இந்த வன்முறைகளில் ஆப்பிரிக்கா முதல்…

Read More

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ரூ.1,435 கோடி மதிப்பிலான பான் 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஒரு தனிநபரின் அனைத்து பரிவர்த்தனைகளையும் கண்காணிக்கவும் இணைக்கவும் வருமான வரித்துறை பான் எண்ணைப் பயன்படுத்துகிறது. இதில் வரி செலுத்துதல், TDS/TCS கிரெடிட்கள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் அடங்கும். பான் என்பது ஒரு நபரை வருமான வரித்துறையுடன் இணைக்கும்போது, அவரது அடையாளமாக செயல்படுகிறது. மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், PAN 2.0 திட்டமானது வரி செலுத்துவோரின் பதிவு சேவைகளை எளிதானதாகவும், விரைவாகவும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். தரவு பாதுகாப்பு, எளிய செயல்முறைகள், குறைந்த செலவு, மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு ஆகியவற்றை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. இத்திட்டம் PAN சேவைகளை விரைவாக வழங்குவதோடு, PAN சரிபார்த்தலையும் விரைவாக மேற்கொள்ளுமென அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இத்திட்டத்தின்படி, PAN அட்டையில் க்யூ ஆர் குறியீடு இணைக்கப்படவுள்ளது. ஆனால்…

Read More

தென் கொரியாவில் கட்டாய ராணுவ சேவையை தவிர்க்க வேண்டுமென்றே உடல் எடையை அதிகரித்த இளைஞருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. தென் கொரியாவில் 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்கும் உடல் தகுதியுள்ள ஆண்கள் குறைந்தது 18 மாதங்கள் கட்டாய ராணுவ சேவை செய்ய வேண்டுமென சட்டம் உள்ளது. ராணுவ சேவையில் விருப்பமில்லாத 26 வயது இளைஞர் ஒருவர், உடல் தகுதியில் தோல்வியுறுவதற்காக திட்டமிட்டு அதிக உணவு உட்கொண்டுள்ளார். இயல்பய் விட அதிகம் உண்டு 102 கிலோ வரை தனது உடல் எடையை மூன்றே மாதங்களில் அவர் அதிகரித்துள்ளார். இந்த குற்றத்திற்காக அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவருக்கு 3 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கலாம் என்ற நிலையில், ராணுவத்திற்கு உண்மையாகச் சேவை செய்வதாக உறுதியளித்ததால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. போர் அல்லாத சேவையில் அவர் பணியாற்ற நீதிமன்றம் அனுமதியளித்தது. மேலும், அந்த இளைஞர் தினமும் இரண்டு மடங்கு உணவை உட்கொள்ள…

Read More

ஆன்லைன் வர்த்தக தளமான மிந்த்ரா, ப்ளிங்கிட், இன்ஸ்டாமார்ட் போன்று விரைவு வர்த்தகத்துறையில் கால் பாதிக்கவுள்ளது. இந்தியாவில் விரைவு வர்த்தகம் மிக வேகமாக வளர்ச்சி பெற்று வரும் துறைகளில் ஒன்றாகும். விரைவு வர்த்தகம் என்பது நுகர்வோர் விரும்பும் பொருட்களை செய்த ஒரு மணி நேரத்திற்குள் டெலிவரி செய்யப்படுவதாகும். மளிகை பொருட்கள் இந்த முறையில் பெரும்பாலும் டெலிவரி செய்யப்படுகின்றன. 2026-ம் ஆண்டில் உணவு விநியோகத்தின் சந்தை மதிப்பை, விரைவு வர்த்தகத்தின் சந்தை மதிப்பு முந்தி விடும் என மார்கன் ஸ்டான்லி அறிக்கை கூறியுள்ளது. மோதிலால் ஓஸ்வால் தரவுகளின் படி, இந்தியாவில் விரைவு வர்த்தகத்தில் சொமேட்டோவின் பிளிங்கிட் 46% பங்குகளுடன் சந்தையில் முன்னணியில் உள்ளது. செப்டோ 29% பங்குகளையும், ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் 24% பங்குகளையும் வகிக்கிறது. ஃப்ளிப்கார்ட், அமேசான், டாடாவின் பிக் பேஸ்கெட் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் விரைவு வர்த்தகத்தில் நுழைந்துள்ள நிலையில் தற்போது மிந்த்ரா நிறுவனமும் விரைவு வர்த்தகத்தில் கால் பாதிக்கிறது. பிளிப்கார்ட்டின் விரைவு…

Read More

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியாவின் வாகன ஏற்றுமதி 30 லட்சம் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. முன்னதாக, இந்தியாவில் இந்த மைல்கல்லை எட்டிய ஒரே நிறுவனம் மாருதி சுசுகி ஆகும். மாருதி சுசுகி நிறுவனம் கடந்த 1986-ம் ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து வாகனங்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. செப்டம்பர் 1987-ல் ஒரே தவணையில் 500 கார்கள் ஹங்கேரிக்கு அனுப்பப்பட்டன. 2013-ம் நிதியாண்டில் சுசுகியின் வாகன ஏற்றுமதி 10 லட்சம் என்ற மைல்கல்லை எட்டியது. அதனை தொடர்ந்து, 2021-ம் நிதியாண்டில் அடுத்த 10 லட்சம் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. 20 லட்சத்திலிருந்து 30 லட்சம் என்ற இலக்கை எட்ட வெறும் 3 ஆண்டுகளே தேவைப்பட்டுள்ளது. குஜராத்தின் பிபாவாவ் துறைமுகத்தில் இருந்து நேற்று அனுப்பப்பட்ட 1,053 கார்களில் 30-வது லட்சம் கார் இடம் பெற்றிருந்தது. செலிரியோ, ஃப்ரான்க்ஸ், ஜிம்னி, பலேனோ, சியாஸ், டிசையர் மற்றும் எஸ்-பிரஸ்ஸோ போன்ற மாடல்…

Read More

தமிழகத்தில் நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணாமாக, அடுத்த 4 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில், வரும் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை எதிரொலியால் நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து…

Read More

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு (FOREX) கடந்த 50 நாட்களில் $47 பில்லியன் குறைந்துள்ளது. அதே நேரத்தில், பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியா தொடர்ந்து 7-வது வாரமாக அந்நிய செலாவணி கையிருப்பில் சரிவைக் கண்டது. இந்த வாரத்தில் மட்டும் சுமார் 18 பில்லியன் டாலர்களை இழந்துள்ளது. இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ள நிலையில், பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 50 நாட்களில் சுமார் 29 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நவம்பர் 15-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு 17.761 பில்லியன் டாலர் குறைந்து 657.892 பில்லியன் டாலராக உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவின் தங்க கையிருப்பு குறைகிறது ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, இந்தியாவின் வெளிநாட்டு நாணயச் சொத்துகள், 569.835 பில்லியன் டாலராக உள்ளன. நாட்டின் தங்க கையிருப்பு…

Read More

இலங்கை, வங்கதேசம், ஜப்பான், சீனா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து ஆப்பிள்கள், மதுபானங்கள் மற்றும் சுஷி ஆகியவற்றின் இறக்குமதிக்கு இந்தியா இந்த ஆண்டு தடை விதித்துள்ளது. ஏனெனில் அவை நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விட குறைவாக இருந்தன. இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையம் (FSSAI) அண்மையில் உணவு இறக்குமதி நிராகரிப்பு எச்சரிக்கை (FIRA) தளத்தை அறிமுகப்படுத்தியது. இந்த தளத்தில், எந்தெந்த நாடுகளில் இருந்து உணவுப்பொருட்கள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது வெளியிடப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (இறக்குமதி) ஒழுங்குமுறை, 2017 இன் விதிமுறை 11(7), உணவு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கிறது FIRA தளத்தின் தகவலின் படி, FSSAI இலங்கையில் இருந்து இலவங்கப்பட்டை பூ மொட்டுகளை மே 24 அன்று பெங்களூரில் நிராகரித்தது. பல்வேறு குறைபாடுகள் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் ஏப்ரல் 22 அன்று இலங்கை பருப்புகள் நிராகரிக்கப்பட்டன.…

Read More

இந்தியாவின் ஜவுளித்துறையில் அடுத்த சில ஆண்டுகளில் எழுச்சி ஏற்படுமென நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் சர்வதேச அளவில் ஜவுளி வர்த்தகத் துறையின் அளவு $800 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் ஏற்றுமதி பங்களிப்பு மட்டும் சுமார் $35 பில்லியன் ஆகும். சமீபத்தில், மத்திய அரசு 2030-ம் ஆண்டிற்குள் $100 பில்லியன் டாலர்களை எட்டுவதற்கான இலக்கை அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 200,000 கோடி ரூபாய் முதலீடுகள் மட்டுமின்றி 30 லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும் கிடைக்கும். இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளில், ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம், கொரோனா போன்றவற்றின் காரணமாக இந்தியாவில் ஜவுளி ஏற்றுமதி தேக்கமடைந்தது. புவிசார் அரசியல் நிலவரம் மற்றும் அதிக உற்பத்தி செலவு காரணமாக, பல சர்வதேச நிறுவனங்கள், சீனாவில் இருந்து இறக்குமதியை குறைக்க விரும்புகின்றன. ஏற்கனவே பல நாடுகள் இதற்கான பணிகளில் இறங்கியுள்ளன. மேலும், ஆடை வர்த்தகத்தில் வலுவான நாடாக பார்க்கப்பட்ட வங்கதேசத்தில் தற்போது…

Read More