வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக பிற்பகலில் புயலாக மாறியது. இந்த புயல் காரைக்கால் – மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரையை கடக்கிறது. நாளை பிற்பகல் புயல் கரையை கடக்கும் போது அதி கனமழை மற்றும் 50 முதல் 90 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது.…
Author: Porulaathaaram Post
மத்திய பொதுத்துறை நிறுவனங்கள்(CPSE ) மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை இணைக்கும் வகையிலான கண்காட்சியை மத்திய எம்எஸ்எம்இ அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. சென்னை கிண்டியிலுள்ள எம்எஸ்எம்இ வளர்ச்சி மற்றும் வசதி அலுவலகத்தில், 2024 டிசம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இந்த கண்காட்சி (CPSE & MSME Connect-2024) நடைபெறவுள்ளது. இந்திய அரசு “பொது கொள்முதல் கொள்கை 2012” (PPP) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறு, குறு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதை ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். அரசு துறைகள். & பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் ஆண்டுத் தேவைகளில் 25% பொருட்கள் மற்றும் சேவைகளை சிறு, குறு நிறுவனங்களிடமிருந்து கட்டாயமாக வாங்க வேண்டும் என்பதே இதன் முக்கிய அம்சம் ஆகும். இந்த 25% வருடாந்திர கொள்முதலில் 4% தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தோரின் நிறுவனங்களிடமிருந்தும், 3% பெண்கள் நடத்தும் நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.இந்த இரண்டு நாள் நிகழ்வில், குறு மற்றும் சிறு…
நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் இடையேயான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சி உற்பத்தி 5.4 சதவீதமாக குறைந்துள்ளது. இது ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 6.7 சதவீதமாகவும், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 8.1 சதவீதமாகவும் இருந்தது. 2025-ம் நிதியாண்டின் 2-வது காலாண்டில் உற்பத்தி துறையின் வளர்ச்சி 2.2 சதவீதமாகவும், சுரங்கம் மற்றும் குவாரி துறையின் வளர்ச்சி -0.1 சதவீதமாகவும் உள்ளது. எனினும், ஒட்டுமொத்தமாக முதலாவது அரையாண்டில் 6.2 சதவீத வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகள் 2-ம் காலாண்டில் 3.5 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. அதேபோல், வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு தொடர்பான சேவைகள், 2025-ம் நிதியாண்டின் 2-ம் காலாண்டில் 6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன. இது கடந்த ஆண்டில் 4.5 சதவீதமாக இருந்தது. தனியார் இறுதி நுகர்வு செலவு 2025-ம் நிதியாண்டின் 2-ம் காலாண்டில் 6…
புல்லட் ரயில்கள், சிக்னலிங் சிஸ்டம் போன்ற நவீன ரயில்வே தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க இந்தியா தயாராகி வருவதாக மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். சமீபத்திய மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு புல்லட் ரயில் போன்ற முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் முன்னேற்றம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன. நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்து 320 கிலோமீட்டர் தொலைவுக்கு உள்கட்டமைப்பு பணிகள் தயாராக உள்ளதென அதிகாரிகள் கூறியுள்ளனர். மும்பை-அகமதாபாத் புல்லட் ரயிலின் அனுபவத்தை கொண்டு எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் புல்லட் ரயில் திட்டங்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல், ரயில்வே பாதுகாப்பு தொழில்நுட்பமான கவாச் 5.0 அமைப்பையும் உள்நாட்டிலேயே தயாரிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு 280 கிலோ மீட்டர் வேகத்திலும், சராசரியாக 250 கிமீ வேகத்திலும் செல்லும் வகையில் புல்லட் ரயில்களை உருவாக்க இந்தியா விரும்புகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை எப்போது செயல்பாட்டிற்கு வரும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது. நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி, 5ஜி சேவை எப்போது செயல்பாட்டிற்கு வருமென காலக்கெடு நிர்ணயிக்கக்கோரி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் பெம்மாசானி சந்திர சேகர்,4ஜி சேவைக்கான உபகரணங்கள் கடந்த செப்டம்பரில் இருந்து நிறுவப்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்த ஆண்டு அக்டோபர் இறுதி வரை 50,708 4ஜி டவர்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அதில் 41,957 தளங்கள் செயல்பட்டுவருவதாகவும் தெரிவித்தார். இந்த உபகரணங்கள் அனைத்தும் 5ஜி சேவைக்கும் மேம்படுத்தக்கூடியவை என்று தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் பெம்மாசானி சந்திர சேகர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார். தற்சார்பு இந்தியா முயற்சிக்கு இணங்க, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4G டவர்களை அமைப்பதற்கான பணிகளில் பிஎஸ்என்எல் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் பெம்மாசானி சந்திர சேகர் கூறினார்.
கூகுள் நிறுவனம் விதிகளை மீறியதாக ஆன்லைன் கேமிங் நிறுவனமான வின்சோ அளித்த புகாரைத் தொடர்ந்து, கூகுள் மீது விசாரணை நடத்த இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) உத்தரவிட்டது. கூகுள் தனது ஆதிக்க நிலையையும், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கான கட்டுப்பாட்டு கொள்கைகளையும் தவறாக பயன்படுத்தியதாக வின்சோ கூகுள் நிறுவனம் மீது குற்றம் சாட்டியுள்ளது. மேலும்,ப்ளே ஸ்டாரில் செயலிகளை இடம்பெற செய்ய நியாயமற்ற கட்டுப்பாடுகளை ஒப்புக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் தங்களது வின்சோ செயலியை தங்கள் இணையதளத்தைப் பயன்படுத்தி மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும் எனவும், ஆண்ட்ராய்டு சாதனங்களில் இந்த செயலியை பதிவிறக்குவதற்கு பயனர்கள் இணையதளத்தை அணுகும்போது, எச்சரிக்கை செய்தி காட்டப்படுவதாகவும் வின்சோ தெரிவித்துள்ளது. இது இந்திய போட்டி சட்டத்தின் பிரிவுகள் 4(2)(a)(i), 4(2)(b)ஐ கூகுள் மீறியதற்கான முகாந்திரம் உள்ளதாகவும், வணிக இழப்பை ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்திய போட்டி ஆணையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சிசிஐ தலைமை இயக்குநர் விசாரணை மேற்கொண்டு 60…
2025 பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு வருமான வரியில் தளர்வுகள் அறிவிக்கப்படுமா என மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சகம் பதிலளித்துள்ளது. 2024 பட்ஜெட்டில், புதிய வரி விதிப்பில் வரி செலுத்துவோருக்கு நிலைக்கழிவு எனப்படும் ஸ்டான்டர்டு டிடக்சனை 50,000-ல் இருந்து 75,000-ஆக உயர்த்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த திருத்தப்பட்ட வரி ஏப்ரல் 2025 முதல் அமலுக்கு வரும். இது சம்பளம் பெறும் ஊழியர்கள் ரூ.17,500 வரை வருமான வரியைச் சேமிக்க அனுமதிக்கும். எனினும், மூத்த குடிமக்கள் இந்த நிவாரணத்தில் சேர்க்கப்படவில்லை. மூத்த குடிமக்களுக்கான வரிச் சலுகைகள் குறித்து மல்காஜ்கிரி மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈட்டால ராஜேந்தர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். மூத்த குடிமக்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.7.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கவும், ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் வரை 5 சதவீத வருமான வரி விதிக்கவும் அரசு முன்மொழிகிறதா? என்றும், மூத்த குடிமக்களுக்கான தேசிய…
இணையவழி குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். பெரும்பாலான மோசடிகள் தொலைபேசி வாயிலாகவே நடைபெறுகின்றன. இந்த மோசடிகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI, தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், விஐ, ஜியோ, பிஎஸ்என்எல் அனைத்திற்கும் புதிய விதிமுறை மற்றும் நிபந்தனைகளை கட்டாயமாக்கியது. அதனை தடுக்கும் விதமாக மெசேஜ் ட்ரேசிபிலிட்டி என்ற புதிய விதிமுறையை TRAI அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, நிதி நிறுவனங்கள், வங்கிகள், இ-காமர்ஸ் நிறுவனங்கள் என எந்த நிறுவனமாக இருந்தாலும், ஓடிபியை அனுப்புவதற்கு முன்னர், அதன் தகவல்களை தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் பதிவு செய்ய வேண்டும். இந்த விதியின் மூலம் மோசடி நடவடிக்கைகளை தடுக்க முடியும் என TRAI நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த விதிமுறையை செயல்படுத்த முதலில் அக்டோபர் 31-ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்கள் கூடுதல் அவகாசம்…
இந்தியா முழுவதும் உள்ள மாநில அரசுகள் மத்திய அரசின் ஸ்கிராப்பேஜ் கொள்கையை விரைவாக செயல்படுத்த வேண்டும் என ஆட்டோமொபைல் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் மத்திய அரசு ஏப்ரல் 2022-ம் ஆண்டு வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கையை அறிமுகப்படுத்தியது. அதன்படி, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களின் பதிவு தொடர வேன்டுமெனில், அவை கட்டாய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென தெரிவித்தது. கட்டாய சோதனையில் தோல்வியுறும் வாகனங்களின் பதிவு சான்றிதழ் ரத்து செய்யப்படும் எனவும், அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவித்தது. பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய ஊக்கத்தொகை வழங்குவதோடு, புதிய வாகனங்களை சலுகை விலையில் வாங்கலாம் எனவும், சாலை வரி குறைக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்தது. பீகார், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ஹரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் இதன்படி சலுகைகளை அறிவித்துள்ளன. பெரும்பாலான மாநிலங்கள் இந்த கொள்கையை…
ரஷ்யாவின் ரயில் தேவை அதிகரித்துள்ளதால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – ரஷ்யா இடையே ஏற்கனவே பல வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ள நிலையில், தற்போது இந்தியாவில் ரயில் உற்பத்தியில் முதலீட்டு செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது. ரஷ்யாவின் ரயில் தேவை அதிகரித்துள்ளதால் அந்நாட்டு அரசு இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. ரஷ்யா மீதான தற்போதைய பொருளாதாரத் தடைகள் இந்த திட்டத்தை எந்த வகையிலும் பாதிக்காது எனவும் அந்நாட்டு அரசு கூறியுள்ளது. ரஷ்யாவின் ரயில் உற்பத்தி நிறுவனமான டிஎம்எச், இந்தியாவை சேர்ந்த நிறுவனமான கினெட் ரயில்வே சொல்யூஷன்ஸில் முக்கிய பங்குதாரராக உள்ளது. கினெட் நிறுவனம் வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில்வே பெட்டிக்கள் தயாரிப்பு மற்றும் அவற்றை 35 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் வகையில் இந்திய ரயில்வேயுடன் சுமார் ரூ .55,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் ரயில் தேவையை ஒட்டி, தற்போது…