Author: Porulaathaaram Post

கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ட்ரம்ப் அறிவித்துள்ளார். தாம் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபின் கையழுத்திடும் கோப்புகளில் இதுவும் ஒன்று என அவர் தெரிவித்துள்ளார். சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்தும் விதமாக இறக்குமதிக்கு அதிக வரி விதித்தாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க எல்லைக்குள் மெக்சிகோவை சேர்ந்த புலம் பெயர்ந்தோரின் கேரவன்கள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு ட்ரம்ப் 25% வரி விதித்துள்ளார். மேலும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஊடுருவல் இண்டும் நிறுத்தப்படும் வரை இந்த வரி விதிப்பு நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக குடியேறுவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும்.…

Read More

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறகுகள் என்ற சிறப்புக்கடன் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மாற்றுப்பாலினத்தவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அடிப்படை நிதிச் சேவைகளைப் பெறுவதில் அதிக சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையில், பொருளாதார ரீதியான அவர்களின் தேவைகளை உறுதி செய்யும் ‘சிறகுகள்’ சிறப்புக்கடன் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள் 5% என்ற அளவிற்கு குறைந்த வட்டியே வசூலிக்கப்படுகிறது  சுயதொழில் மற்றும் சிறுவணிகம் போன்ற தேவைகளுக்கு கடன். எளிய நடைமுறைகள். தனிநபருக்கும், சுயஉதவிக் குழுக்களுக்கும் கடன் கடனை அடைத்த பிறகு மறுநாளே மீண்டும் கடன் பெறலாம். கடனளவு குறைந்த பட்சம் ரூ.5.000 முதல் அதிகபட்சம் ரூ.1,00,000 வரை. அதிகபட்சம் 36 மாத தவணைகளில் திருப்பிச் செலுத்தலாம் கடன் வழங்கும் நிறுவனங்கள் மாநிலத்தின் அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளில் இக்கடன் வழங்கப்படும். தகுதி மாற்றுப் பாலினத்தவராக இருத்தல் வேண்டும். வங்கிக்கிளை…

Read More

தற்போது பயன்பாட்டில் இருக்கும் பான் கார்டை க்யூ ஆர் கோடு வசதி உடன் மேம்படுத்துவதற்காக ரூ.1,435 கோடி மதிப்பிலான 2.0 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு தனிநபரின் அனைத்து பரிவர்த்தனைகளையும், கண்காணிக்கவும் இணைக்கவும் வருமான வரித்துறை பான் எண்ணைப் பயன்படுத்துகிறது. இதில் உள்ள 10 இலக்க எண் அடையாள எண்ணாக செயல்படுகிறது. தற்போது, ரூ.1,435 கோடி மதிப்பில் பான் அட்டைகளை க்யூ.ஆர் கோடு வசதியுடன் மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பான் 2.0 இன் அம்சங்கள் என்ன? பான் அட்டைகள் க்யூ.ஆர் கோடு வசதியுடன் மேம்படுத்தப்படும். இந்தத் திட்டம் மூலம் தற்போது பான் அட்டை வைத்துள்ள 78 கோடி பேர், தங்கள் பான் அட்டைகளை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம். இதில், பான் எண் மாறாது. பான் அட்டை மட்டும் கூடுதல் பாதுகாப்பு மற்றும் தரவு அம்சங்களுடன் மேம்படுத்தப்படும். இதே போல், தொழில்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று,…

Read More

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறவுள்ளது. இந்த புயலுக்கு ஃபெங்கால் என பெயரிடப்படும். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக தெரிவித்தார். இது நாளை மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெறக்கூடும் எனவும், இதனால் அடுத்த வரும் 24 மணி நேரத்திற்கு மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் என தெரிவித்தார். இதையடுத்து, அப்பகுதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக கடலூர் பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புயல் முன்னெச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட ஆறு மாவட்ட…

Read More

2023 ஆண்டில் உலகம் முழுவதிலும் நாளொன்றுக்கு 140 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது துணைவராலோ அல்லது குடும்ப உறுப்பினர்களாலோ கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலும் குடும்பத்தினராகவோ, தெரிந்தவராகவோ உள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஒட்டி, ஐநாவின் பெண்கள் மற்றும் போதைப்பொருள், குற்றச்செயல்கள் தடுப்பு அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது . அதன்படி, சர்வதேச அளவில் 2023-ம் ஆண்டில் சராசரியாக 51,100 பெண்கள் மற்றும் சிறுமிகளின் மரணத்திற்கு குடும்ப உறுப்பினர்களே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இது ஒரு நாளைக்கு 140 பெண்கள் வீதம் ஆகும். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிக ஆபத்தான இடம் அவர்களது வீடுதான் என்று ஐநா அறிக்கை கூறியுள்ளது. இந்த வன்முறைகளில் ஆப்பிரிக்கா முதல்…

Read More

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ரூ.1,435 கோடி மதிப்பிலான பான் 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஒரு தனிநபரின் அனைத்து பரிவர்த்தனைகளையும் கண்காணிக்கவும் இணைக்கவும் வருமான வரித்துறை பான் எண்ணைப் பயன்படுத்துகிறது. இதில் வரி செலுத்துதல், TDS/TCS கிரெடிட்கள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் அடங்கும். பான் என்பது ஒரு நபரை வருமான வரித்துறையுடன் இணைக்கும்போது, அவரது அடையாளமாக செயல்படுகிறது. மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், PAN 2.0 திட்டமானது வரி செலுத்துவோரின் பதிவு சேவைகளை எளிதானதாகவும், விரைவாகவும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். தரவு பாதுகாப்பு, எளிய செயல்முறைகள், குறைந்த செலவு, மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு ஆகியவற்றை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. இத்திட்டம் PAN சேவைகளை விரைவாக வழங்குவதோடு, PAN சரிபார்த்தலையும் விரைவாக மேற்கொள்ளுமென அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இத்திட்டத்தின்படி, PAN அட்டையில் க்யூ ஆர் குறியீடு இணைக்கப்படவுள்ளது. ஆனால்…

Read More

தென் கொரியாவில் கட்டாய ராணுவ சேவையை தவிர்க்க வேண்டுமென்றே உடல் எடையை அதிகரித்த இளைஞருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. தென் கொரியாவில் 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்கும் உடல் தகுதியுள்ள ஆண்கள் குறைந்தது 18 மாதங்கள் கட்டாய ராணுவ சேவை செய்ய வேண்டுமென சட்டம் உள்ளது. ராணுவ சேவையில் விருப்பமில்லாத 26 வயது இளைஞர் ஒருவர், உடல் தகுதியில் தோல்வியுறுவதற்காக திட்டமிட்டு அதிக உணவு உட்கொண்டுள்ளார். இயல்பய் விட அதிகம் உண்டு 102 கிலோ வரை தனது உடல் எடையை மூன்றே மாதங்களில் அவர் அதிகரித்துள்ளார். இந்த குற்றத்திற்காக அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவருக்கு 3 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கலாம் என்ற நிலையில், ராணுவத்திற்கு உண்மையாகச் சேவை செய்வதாக உறுதியளித்ததால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. போர் அல்லாத சேவையில் அவர் பணியாற்ற நீதிமன்றம் அனுமதியளித்தது. மேலும், அந்த இளைஞர் தினமும் இரண்டு மடங்கு உணவை உட்கொள்ள…

Read More

ஆன்லைன் வர்த்தக தளமான மிந்த்ரா, ப்ளிங்கிட், இன்ஸ்டாமார்ட் போன்று விரைவு வர்த்தகத்துறையில் கால் பாதிக்கவுள்ளது. இந்தியாவில் விரைவு வர்த்தகம் மிக வேகமாக வளர்ச்சி பெற்று வரும் துறைகளில் ஒன்றாகும். விரைவு வர்த்தகம் என்பது நுகர்வோர் விரும்பும் பொருட்களை செய்த ஒரு மணி நேரத்திற்குள் டெலிவரி செய்யப்படுவதாகும். மளிகை பொருட்கள் இந்த முறையில் பெரும்பாலும் டெலிவரி செய்யப்படுகின்றன. 2026-ம் ஆண்டில் உணவு விநியோகத்தின் சந்தை மதிப்பை, விரைவு வர்த்தகத்தின் சந்தை மதிப்பு முந்தி விடும் என மார்கன் ஸ்டான்லி அறிக்கை கூறியுள்ளது. மோதிலால் ஓஸ்வால் தரவுகளின் படி, இந்தியாவில் விரைவு வர்த்தகத்தில் சொமேட்டோவின் பிளிங்கிட் 46% பங்குகளுடன் சந்தையில் முன்னணியில் உள்ளது. செப்டோ 29% பங்குகளையும், ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் 24% பங்குகளையும் வகிக்கிறது. ஃப்ளிப்கார்ட், அமேசான், டாடாவின் பிக் பேஸ்கெட் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் விரைவு வர்த்தகத்தில் நுழைந்துள்ள நிலையில் தற்போது மிந்த்ரா நிறுவனமும் விரைவு வர்த்தகத்தில் கால் பாதிக்கிறது. பிளிப்கார்ட்டின் விரைவு…

Read More

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியாவின் வாகன ஏற்றுமதி 30 லட்சம் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. முன்னதாக, இந்தியாவில் இந்த மைல்கல்லை எட்டிய ஒரே நிறுவனம் மாருதி சுசுகி ஆகும். மாருதி சுசுகி நிறுவனம் கடந்த 1986-ம் ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து வாகனங்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. செப்டம்பர் 1987-ல் ஒரே தவணையில் 500 கார்கள் ஹங்கேரிக்கு அனுப்பப்பட்டன. 2013-ம் நிதியாண்டில் சுசுகியின் வாகன ஏற்றுமதி 10 லட்சம் என்ற மைல்கல்லை எட்டியது. அதனை தொடர்ந்து, 2021-ம் நிதியாண்டில் அடுத்த 10 லட்சம் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. 20 லட்சத்திலிருந்து 30 லட்சம் என்ற இலக்கை எட்ட வெறும் 3 ஆண்டுகளே தேவைப்பட்டுள்ளது. குஜராத்தின் பிபாவாவ் துறைமுகத்தில் இருந்து நேற்று அனுப்பப்பட்ட 1,053 கார்களில் 30-வது லட்சம் கார் இடம் பெற்றிருந்தது. செலிரியோ, ஃப்ரான்க்ஸ், ஜிம்னி, பலேனோ, சியாஸ், டிசையர் மற்றும் எஸ்-பிரஸ்ஸோ போன்ற மாடல்…

Read More

தமிழகத்தில் நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணாமாக, அடுத்த 4 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில், வரும் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை எதிரொலியால் நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து…

Read More