Author: Porulaathaaram Post

மும்பை பங்குச்சந்தையான பிஎஸ்இ-யில் இருந்து வரும் டிசம்பர் 23-ம் தேதி முதல் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவன பங்குகள் நீக்கப்படும் என்றும், அதற்கு பதிலாக ஜொமேட்டோ பங்குகள் இடம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக BSE 100, BSE சென்செக்ஸ் 50 மற்றும் BSE சென்செக்ஸ் நெக்ஸ்ட் 50 உட்பட பல முக்கிய குறியீடுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன . ஆறு மாத சந்தை செயல்பாட்டின் அடிப்படையில் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் சேர்க்கவோ, நீக்கவோ படுகின்றன இதேபோல் அசோக் லேலண்ட், பிஐ இண்டஸ்ட்ரீஸ், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், ஐஆர்சிடிசி, யுபிஎல் மற்றும் ஏபிஎல் அப்பல்லோ டியூப் பங்குகள் வரும் டிசம்பர் 23-ம் தேதி முதல் BSE 100-ல் நீக்கப்பட்டு அவற்றிற்கு பதில் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ், சுஸ்லான் எனர்ஜி, அதானி க்ரீன் எனர்ஜி, அதானி பவர், சம்வர்தனா மதர்சன் மற்றும் பிபி ஃபின்டெக் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. ஹெச்டிஎப்சி லைவ், பிபிசிஎல் மற்றும் எல்டிஐ…

Read More

பிட்காயினின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 99289 டாலரை எட்டியது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே ஏற்றம் கண்டு வரும் பிட்காயின், இன்று புதிய உச்சம் கண்டுள்ளது. ட்ரம்பின் சமூக ஊடக நிறுவனமான ட்ரூத் சோஷியல் கிரிப்டோ வர்த்தக தளமான பக்த்-ஐ வாங்கவுள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து இந்த உயர்வு எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிகபட்சமாக 99289 டாலரை எட்டிய பிட்காயினின் மதிப்பு, இன்றைய வர்த்தக நேர முடிவில் 97,594.85 அமெரிக்க டாலராக இருந்தது. பிட்காயின் மதிப்பு இந்த ஆண்டில் மட்டும் இரு மடங்காக அதிகரித்துள்ளது. கிரிப்டோகரன்சி வணிகத்துக்கு ட்ரம்ப் அரசு ஆதரவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் கிரிப்டோகரன்சி சந்தையில் ஏற்றம் நீடிக்கிறது கடந்த இரண்டு வாரங்களில் 40% மேல் பிட்காயினின் மதிப்பு உயர்ந்துள்ளது. விரைவில் ஒரு லட்சம் டாலரை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா காலத்தில் பிட்காயினின் மதிப்பு வெறும் 5,000 அமெரிக்க டாலராக இருந்தது.

Read More

வாரத்தின் இறுதி நாளான இன்று பங்குச்சந்தைகள் 2% உயர்வுடன் முடிவடைந்துள்ளன. அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றம் சுமத்திய லஞ்சப்புகாரால் இந்திய பங்குச்சந்தைகள் நேற்று சரிவை சந்தித்தன. இன்று காலை உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை வர்த்தக நேர முடிவில் 2.39% உயர்வுடன் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,961.32 புள்ளிகள் அதிகரித்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 557.35 புள்ளிகள் உயர்ந்தது. இது கடந்த ஐந்து மாதங்களில் ஒரே நாளில் நிகழ்ந்த அதிகபட்ச உயர்வாகும். நேற்று சுமார் 20 சதவீதம் சரிவை சந்தித்த அதானி குழும பங்குகள் இன்று 2% அளவுக்கு உயர்ந்தன. இருப்பினும் இன்னும் சந்தையில் ஏற்ற, இறக்கம் தொடர்வதாகவும், சந்தை முழுமையாக மீண்டுள்ளதாக கணக்கில் கொள்ள முடியாது என்றும் aநிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், டிசிஎஸ், ஐடிசி உட்பட பல்வேறு சந்தைகள் ஏற்றம் கண்டன. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பங்குகள் மட்டும் சரிவை…

Read More

மொபைல் முதல் மடிக்கணினிகள் வரையிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் உதிரி பாகங்களை உள்நாட்டில் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இந்தியா ரூ.500 கோடி வரை ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆப்பிள், சாம்சங் போன்ற சர்வதேச நிறுவனங்களின் மொபைல் உற்பத்தி காரணமாக இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி கடந்த ஆறு ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்து 2024-ம் ஆண்டில் 115 பில்லியன் டாலராக உள்ளது. இது இப்போது உலகின் நான்காவது பெரிய ஸ்மார்ட் போன் உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. ஆனால், உதிரி பாகங்களுக்காக சீனாவை நம்பியிருக்கும் சூழல் உள்ளது இதனைத்தொடர்ந்து, எலக்ட்ரானிக்ஸ் உதிரி பாகங்களுக்கான உள்நாட்டு விநியோக சங்கிலியை மேம்படுத்த, நிறுவங்களுக்கு ரூ.500 கோடி வரை ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின்படி, தகுதியான சர்வதேச மற்றும் உள்ளூர் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை…

Read More

தஞ்சையிலுள்ள சுயதொழில் முனைவோருக்கான வழிகாட்டு நிகழ்ச்சியை ஸ்டார்ட்அப்டிஎன் ஏற்பாடு செய்துள்ளது. ஸ்டார்ட்அப்டிஎன் அமைப்பு தமிழ்நாட்டில் சுயதொழில் முனைவோருக்கு உதவவும், சுயதொழில் முனைவோருக்கு ஏற்ற சூழலை மாநிலத்தில் உருவாக்கவும் செயல்பட்டு வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு வழிகாட்டு நிகழ்ச்சிகள், பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஸ்டார்ட்அப்டிஎன் தஞ்சாவூர் மற்றும் தஞ்சாவூர் வர்த்தகம் மற்றும் தொழில் கழகம் (சிசிஐ தஞ்சாவூர்) ஆகியவற்றுடன் இணைந்து ஞானம் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் வழிகாட்டு நிகழ்ச்சியை நாளை ஏற்பாடு செய்துள்ளது. பல்வேறு துறைகளை சேர்ந்த 13 பேச்சாளர்கள் இதில் பங்கேற்று பேசவுள்ளனர். இந்த நிகழ்ச்சி நாளை (23 நவம்பர் 2024) காலை 9:00 முதல் மாலை 5:00 வரை தஞ்சையிலுள்ள ஞானம் ஆஃப் பிசினஸில் நடைபெறவுள்ளது. சிசிஐ உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் இலவசமாக பங்கேற்கலாம். பிறருக்கு ரூ.500 பதிவுக்கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Read More

ஐஸ்லாந்தில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை மீண்டும் வெடித்து சிதறியுள்ளது. இது இந்த ஆண்டில் 7-வது முறையாகும். இதனை தொடர்ந்து ஐஸ்லாந்தில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமான புளூ லகூனில் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். அவசர நிலை அறிவிக்கப்பட்டு பொதுமக்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த எரிமலை வெடிப்பால் விமான போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. இந்த ஆண்டில் 7-வது முறையாக இந்த எரிமலை வெடித்துள்ளதால் உட்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எந்நேரமும் எரிமலை மீண்டும் வெடிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த எரிமலை வெடிப்பினால் சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு பிளவு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனினும். இது கடந்த அக்டோபர் மாதம் ஏற்பட்ட பிளவை விட குறைவு என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ. ஏர்டெல், விஐ ஆகிய நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியதை தொடர்ந்து அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-ஐ நோக்கி வாடிக்கையாளர்கள் திரும்பியுள்ளனர். ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. இதில் ஜியோ நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் 79.69 லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் 14.34 லட்சம் வாடிக்கையாளர்களையும், வோடபோன் ஐடியா நிறுவனம் 15.53 லட்சம் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளது. அதே சமயம், செப்டம்பர் மாதத்தில் 8.49 லட்சம் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல்-லில் இணைந்துள்ளதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(TRAI ) வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரியவந்துள்ளது. ஆனால் இது கடந்த மாதங்களை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவாகும். முன்னதாக, ஆகஸ்ட் மாதத்தில் 25 லட்சம் வாடிக்கையாளர்களும், ஜூலையில் 29 லட்சம் வாடிக்கையாளர்களும் பிஎஸ்என்எல்-லில் இணைந்தனர். கடந்த இரண்டரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜியோ நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிக…

Read More

உத்தரகாண்டின் பித்தோராகரில் 133 காலிப்பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்ததால் அங்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. பிராந்திய ராணுவ ஆட்சேர்ப்புக்கான முகாம், உத்தரகாண்டின் பித்தோராகரில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. அண்மையில் பீகார் மாநிலம் தானாபூரில் நடைபெற இருந்த ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, உத்தரபிரதேசத்தில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் பித்தோராகருக்கு வரத் தொடங்கினர். அவர்களுக்கு போதிய தங்குமிடம் இல்லததால் சாலைகளிலும், நடைபாதைகளிலும் இரவைக் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், பிற ஊர்களில் இருந்து பித்தோராகருக்குச் செல்ல வாடகை வாகனங்கள் ரூ.10,000 வரை கட்டணம் வசூலித்ததாக இளைஞர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மாவட்ட நிர்வாகம், ராணுவ ஆட்சேர்ப்பு முகாமிற்கு வந்த இளைஞர்கள் தங்குவதற்காக 30 பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், அவர்களுக்கான உணவும் ஏற்பாடு செய்து தரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

Read More

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான அதானி மீது அமெரிக்காவின் நியூயார்க் கிழக்கு நீதிமன்றம் லஞ்சப்புகார் சுமத்தியுள்ள நிலையில், இந்த புகார்களை அதானி குழுமம் மறுத்துள்ளது. கௌதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி மற்றும் அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் 6 பேர் சூரிய சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு 2020 முதல் 2024-ம் ஆண்டு வரை ரூ.2,029 கோடி ($265 மில்லியன்) லஞ்சம் கொடுத்ததாக நியூயார்க் கிழக்கு நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளனது. இந்த குற்றச்சாட்டை முன்வைத்து, அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் ஆகியோர் மீது அமெரிக்காவில் கைது வாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதானி குழுமம் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த அஸூர் பவர் நிறுவனம் தொடர்புடைய எரிசக்தி திட்டங்களில் இருந்து $2 பில்லியன் லாபம் ஈட்டும் நோக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் நியூயார்க் நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. சோலார் ஒப்பந்தத்துக்காக அதானி இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து போலி அறிக்கைகள் மூலம் அமெரிக்கா மற்றும்…

Read More

சர்வதேச அளவில் கட்டுமானம் செய்யப்படும் கப்பல்களில், 10 சதவீதம் கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இதற்காக மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சகத்தை சேர்ந்த உயர்மட்ட குழு, வரும் 28-ம் தேதி தென் கொரியாவின் சியோல் நகருக்கு செல்லவுள்ளது. உலகின் கப்பல் கட்டுமானத்தில் முன்னணி வகிக்கும் நாடுகளில் தென் கொரியாவும் ஒன்றாகும். ஐந்தில் ஒரு பங்கு கப்பல்கள் தென்கொரியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. சாம்சங் போன்ற நிறுவனங்கள் இந்த குழு ஆலோசனை நடத்துவுள்ளதாக கூறப்படுகிறது. தென்கொரியாவை விட இந்தியாவில் தயாரிப்பு செலவுகள் குறைவு என்பதால், பிற நாடுகளை இந்தியாவை நோக்கி வரவழைக்க முடியும் என நம்பப்படுகிறது. விசாகப்பட்டினம், பாரதீப், குஜராத் போன்ற இடங்களில் இதற்கான கட்டுமானங்கள் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கடற்படைக்கு விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை உள்நாட்டில் தயாரிக்கும்போது சரக்கு கப்பல்களை தயாரிப்பது கடினமாக இருக்காது என பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ்…

Read More