Author: Porulaathaaram Post

இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், 809.53 புள்ளிகள் உயர்ந்து 81,765.86 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 240.95 புள்ளிகள் உயர்ந்து 24,708.40 புள்ளிகளாகவும் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டில் உள்ள டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட ஐடி நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிவடைந்தன. என்டிபிசி, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்டவை சரிவை சந்தித்தன. இன்போசிஸ் , டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவன பங்குகள் தலா 3 சதவீதம் உயர்ந்தன. ஐசிஐசிஐ வங்கி,  பார்தி ஏர்டெல் ஆகியவை தலா 1.9 சதவீதம் வரை உயர்ந்தன. தேசிய பங்குச் சந்தையில் உள்ள டாப் 50 பங்குகளில் 46 பங்குகள் ஏற்றத்திலும், 4 பங்குகள் சரிந்தும் வர்த்தகமாகின. துறை ரீதியாக நிஃப்டி ஐடி 2 சதவிகிதம் உயர்ந்து முதலிடத்தில் உள்ளது. நிஃப்டி பொதுத்துறை வங்கி தலா 0.1 % சரிந்தது முடிந்தது. டாலருக்கு நிகரான இந்திய…

Read More

கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படுமென ட்ரம்ப் அறிவித்துள்ளதால், ஆடி, பிஎம்டபிள்யு, ஃபாக்ஸ்கான் உள்பட பல நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்திக்கவுள்ளன. அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப், சட்டவிரோத குடியேற்றம் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம் குறித்த கவலைகளை மேற்கோள் காட்டி, தான் பதவியேற்ற முதல் நாளிலேயே மெக்சிகோ, கனடா மற்றும் சீனாவில் இருந்து வரும் பொருட்கள் மீது  கூடுதல் வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தார். ட்ரம்பின் இந்த அறிவிப்பால் பல நிறுவனங்கள் பாதிக்கப்படவுள்ளன. ஆடி: மெக்ஸிகோவில் உள்ள ஆடியின் ஆலை Q5 காரை உற்பத்தி செய்கிறது. 2024-ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் அமெரிக்காவிற்கு 40,000 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. பிஎம்டபிள்யு: பிஎம்டபிள்யுவின் மெக்சிகோ ஆலை 3 சீரிஸ், 2 சீரிஸ் கூபே மற்றும் M2 மாடல்களை உற்பத்தி செய்கிறது. அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும், மெக்சிகோவில் இயங்கும் கியா,…

Read More

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 2025 ஜனவரி 1 முதல் அனைத்து மாடல் கார்களின் விலையையும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. உற்பத்தி செலவுகள் மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்ததன் காரணமாக விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. உயர்ந்து வரும் செலவுகளை கட்டுப்படுத்தி முடிந்தவரை வாடிக்கையாளர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில் பார்த்துக்கொள்வதே தங்களது நோக்கம் என ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், உற்பத்தி செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதனை ஈடுகட்ட சிறிய அளவில் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டதென ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. விலைகள் எவ்வளவு உயரும்? 2025-ம் ஆண்டு வெளியான அனைத்து மாடல்களிலும் ரூ.25,000 வரை விலை உயர்த்தப்படும் என்று ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, டஸ்கான் மற்றும் i30 செடான் போன்றவற்றின் விலை உயரும். நவம்பர் மாதத்தில் ஹூண்டாய் கார்களின் உள்நாட்டு விற்பனை 48,246 ஆகவும், ஏற்றுமதி 13,006 ஆகவும்…

Read More

சர்வதேச சந்தையில் ஒரு பிட்காயின் விலை ஒரு லட்சம் அமெரிக்க டாலரை தாண்டிவிட்டது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.84.72 லட்சம் ஆகும். இந்த ஆண்டில் மட்டும் பிட்காயினின் மதிப்பு 2 மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் 45% உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வென்றது கிரிப்டோகரன்சி சந்தையில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப் தனது பிரச்சாரத்தின்போது டிஜிட்டல் சொத்துக்களை ஏற்றுக்கொள்வதாக அறிவித்ததோடு, அமெரிக்காவின் பிட்காயின் கையிருப்பைக் அதிகவும் உறுதியளித்தார். கிரிப்டோகரன்சி தோன்றி 16 ஆண்டுகளுக்கு மேலாக, பிட்காயின் குறித்த பல்வேறு சர்ச்சை வரலாறு இருந்தபோதிலும், பிரதானமான குதலீட்டாளர்கள் இதனை ஏற்றுக்கொண்டதையே இந்த விலை உயர்வு எடுத்துக்காட்டுகிறது. பெரிய முதலீட்டாளர்கள் முதல் சில்லறை முதலீட்டாளர்கள் வரை பலரும் பிட்காயினில் நேரடியாக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். தற்போது, பிட்காயினின் மதிப்பு 100,000 டாலருக்கு மேல் உயர்ந்துள்ள நிலையில், முதலீட்டாளர்கள் சந்தை மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து…

Read More

ஆசியாவில் மிகச்சிறந்த நாணயங்களில் இந்தியா ரூபாயும் இடம் பெற்றுள்ளதாக மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு  எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், மத்திய கிழக்கு நாடுகளின் நெருக்கடி, சர்வதேச சவால்களுக்கு இடையிலும் ஆசிய அளவில் சிறந்த  நாணயங்களில் ஒன்றாக இந்தியா ரூபாய் உருவெடுத்துள்ளதாக குறிப்பிட்டார். ஆசிய அளவில் ரூபாயின் செயல்பாடு வலிமையாக இருப்பது இந்தியாவின் வலுவான பொருளாதார அடிப்படையை காட்டுவதாகவும் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நவம்பர் 19 நிலவரப்படி 1.4 சதவீதம் சரிவை சந்தித்தது. அதேசமயம், ஜப்பானின் யென் 8.8 சதவீதமும், தென் கொரியாவின் வோன் 7.5 சதவீதமும் சரிவடைந்துள்ளன.  பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாய் வலுவாக உள்ளதாகவும், இது இந்தியாவின் நிலையான பொருளாதாரத்திற்கு சான்றாக அமைந்துள்ளதாகவும், பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். அதேபோல், பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் குறித்து மத்திய அரசுக்கு எந்த யோசனையும்…

Read More

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு வரி விதித்தது இந்தியாவுக்கு சாதகமானது என நிதி ஆயோக்  தெரிவித்துள்ளது.. டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி, இந்த வரி விதிப்பு குறுகிய காலத்தில் உலகளாவிய வர்த்தகத்திற்கு அதிர்ச்சியாக அளித்தாலும், சர்வதேச விநியோகச் சங்கிலிகளில் இந்தியா தனது பங்கை அதிகரிக்க வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவித்தார். அமெரிக்க அதிபராக தான் பதவியேற்ற முதல் நாளில் சீனா, மெக்சிகோ மற்றும் கனடா மீது வரிகளை விதிக்கப் போவதாகக் ட்ரம்ப் கூறியுள்ளார். ஆனால் அவர் இந்தியாவைக் குறிப்பிடவில்லை. இந்த வரி உயர்வால் தெற்காசிய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 30 அடிப்படை புள்ளிகள் குறையும் என்று மோர்கன் ஸ்டான்லி அறிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த வரி உயர்வு வர்த்தக திசை திருப்பலுக்கு வழிவகுக்கும் என்றும், அதன் விளைவுகள் அடுத்த சில மாதங்களில் தெரிய வருமென நிதி…

Read More

ஊழியர்களின் வேலை நேரத்தைக் கட்டுப்படுத்தவும், பணி நேரம் சரியாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் காங்கிரஸ் எம்பி சசி தரூர் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் பூஜ்ய நேரத்தில் பேசிய சசி தரூர், நீண்ட நேரம் வேலை செய்வது ஊழியர்களை மனச்சோர்வு, பதற்றம், மனநலப் பிரச்சினைகள்,  உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களுக்குள் தள்ளியுள்ளது என்று  கூறினார். வேலை நேரத்தைக் கட்டுப்படுத்தும் சட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கவும், அவை  பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் சசி தரூர் வலியுறுத்தினார். வேலை-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக தேவை என்றும்  கூறினார்.  எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தை சேர்ந்த பட்டயக் கணக்காளரான அன்னா செபாஸ்டியன் பேராயில் பணிச்சுமை காரணமாக அண்மையில் உயிரிழந்ததை சுட்டிக்காட்டி சசி தரூர் பேசினார். நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் இளைஞர்களின் நலனை பாதுகாப்பதில் நாம் தோல்வி அடைந்துள்ளதாவும் அவர் கூறினார். இந்திய…

Read More

டவர் நிறுவனமான இண்டஸ் டவர்ஸில் தனக்கு மீதமுள்ள 3 சதவீத பங்குகளை விற்க வோடபோன் குழுமம் முடிவு செய்துள்ளது. தனது இந்திய சொத்துக்களின் மீதுள்ள சுமார் $101 மில்லியன் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக இந்த பங்குகளை விற்பதாக லண்டன் பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம், வோடபோன் இண்டஸ் டவர்ஸில் தனக்கு இருந்த 484.7 மில்லியன் பங்குகளை விற்பனை செய்வதாக வோடபோன் நிறுவனம் அறிவித்தது. இது இண்டஸ் டவர்ஸின் பங்கில் 18 சதவீதம் ஆகும். இதன் மூலம் திரட்டப்பட்ட 1.7 பில்லியன் யூரோக்கள் வோடஃபோனின் இந்திய சொத்துக்கள் மீது வங்கியில் நிலுவையில் உள்ள கடன்களை திருப்பிச் செலுத்த பயன்படுத்தப்பட்டது. தற்போது வோடாஃபோன் நிறுவனம் தனது மீதமுள்ள 3 சதவீதம் பங்குகளான 79.2 மில்லியன் பங்குகளை விற்று, 101 மில்லியன் டாலர் நிதி திரட்டவுள்ளதாக லண்டன் பங்குச் சந்தையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

Read More

இந்திய ரிசர்வ் வங்கி யுபிஐ லைட் பரிவர்த்தனைக்கான வரம்பை ரூ .1,000 லிருந்து ரூ .5,000 ஆக உயர்த்தியுள்ளது. யுபிஐ லைட் என்பது இணைய வசதியின்றி கடவுச்சொல் (பாஸ்வேர்டு) இல்லாமல் நேரடியாக பரிவர்த்தனை செய்யும் முறை ஆகும். இதன்படி, வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்கில் இருந்து வாலட்டில் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். மொபைல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி வாடிக்கையாளர்கள் தங்கள் வாலட்டில் ரூ.5000 வைத்திருப்பதோடு, UPI பின் இல்லாமல் ரூ.1000 செலுத்த முடியும். கூகுள்பே, போன்பே போன்ற பல செயலிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு யுபிஐ லைட் சேவையை வழங்குகின்றன. இந்த செயல்முறையை எளிதாக்கும் வகையில் ஆட்டோ டாப்-அப் அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் யுபிஐ இயங்குதளம் மூலம் 15.48 பில்லியன் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. மதிப்பின் அடிப்படையில், நவம்பர் மாதத்தில் ரூ.21.55 டிரில்லியனாக உள்ளது. இந்த புதிய மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

முத்தூட் மைக்ரோஃபின் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் நுண்நிதி கடன்களுக்கான வட்டி விகிதங்களை 0.25 சதவீதமும், மூன்றாம் தரப்பு பொருட்களை வாங்குவதற்கான கடனுக்கான வட்டி விகிதங்களை 1.25  சதவீதமும் குறைத்துள்ளது. அதன்படி, வருமானம் ஈட்டும் கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதம் 23.05% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  கேரளாவைச் சேர்ந்த முத்தூட் பாப்பச்சன் குழுமத்தின் ஒரு அங்கமான முத்தூட் மைக்ரோஃபின் நிறுவனம், மூன்றாவது முறையாக கட்டணத்தை குறைத்துள்ளது. மூன்றாம் தரப்பு தயாரிப்புகளை வாங்குவதற்கான சில்லறை பாதுகாப்பற்ற கடன்களுக்கான புதிய வட்டி விகிதம் 22.7% முதல் 23.7% வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதமே முத்தூட் மைக்ரோஃபின் கட்டணங்களை மேலும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் நேற்றைய தேதிக்கு பிறகு வாங்கப்படும் அனைத்து கடன்களுக்கும் செல்லுபடியாகும். முத்தூட் மைக்ரோஃபின் இதே ஆண்டில் 3-வது முறையாக வட்டி விகிதத்தை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More