Author: Porulaathaaram Post

சென்னை- பெங்களூரு இடையேயான ரயில் பயண நேரம் மேலும் ஒரு மணி நேரம் குறையவுள்ளது. சென்னை – பெங்களூரு இடையேயான ரயில் வழித்தடத்தை ஒரு முக்கியமான அதிவேக பாதையாக மாற்ற இரு மாநிலங்களும் உறுதியாக இருப்பதால், வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் 4.30 மணி நேரத்திலிருந்து மூன்று மணிநேரம் மற்றும் முப்பத்தைந்து நிமிடங்களாக குறையவுள்ளது. அதே நேரத்தில் சதாப்தியின் பயண நேரம் இருபது நிமிடங்களுக்கு மேல் குறையவுள்ளது. இதனை முன்னிட்டு, ஜோலார்பேட்டை-பெங்களூரு இடையேயான பயணத்தை விரைவுபடுத்தவும், அந்த வழியாக செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு நடைபெற்ற சோதனை ஓட்டத்தில் கே.எஸ்.ஆர்., பெங்களூருவில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்ட ரயில், 9.28 மணிக்கு ஜோலார்பேட்டை சென்றடைந்தது. பெங்களூரு-சென்னையின் பாதை மக்களுக்கு மட்டுமல்ல, வணிகத்திற்கும் முக்கியமானது. ஏனெனில் இது பொருளாதாரம், தொழில்நுட்பம், உற்பத்தி மையங்களையும் இணைக்கிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அதன் சோதனைகளின் போது அதிகபட்சமாக…

Read More

நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, காப்பீட்டுத் திருத்த மசோதாவில் முன்மொழியப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்களுக்கு ஆதரவளித்துள்ளது. காப்பீட்டுத்துறையின் திறன் மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, காப்பீட்டுத் துறையில் சீர்திருத்தங்களுக்கு நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த காப்பீட்டுத் திருத்த மசோதா பல முக்கிய மாற்றங்களை முன்மொழிகிறது. கூட்டு காப்பீடுகள் காப்பீட்டு நிறுவனங்கள் ஒரே உரிமத்தின் கீழ் ஆயுள் மற்றும் ஆயுள் அல்லாத காப்பீடுகளை வழங்க முடியும். அந்நிய முதலீட்டு வரம்பு அதிகரிப்பு முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களில் வெளிநாட்டு முதலீட்டு வரம்பை உயர்த்துவதும் அடங்கும். தற்போது 74% என நிர்ணயிக்கப்பட்டுள்ள அந்நிய முதலீட்டு வரம்பை 100% ஆக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  இந்த மாற்றம் காப்பீட்டுத் துறையில் அதிக வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது. சைபர் பாதுகாப்பு பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்க முன்மொழிவு சைபர் பாதுகாப்பு பாதுகாப்பு ஆணையத்தை…

Read More

2025-ம் நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) குறித்து நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவும், இந்திய ரிசர்வ் வங்கியும் வெளியிட்டுள்ள கணிப்புகள் கவலையளிக்கும் விதத்தில் உள்ளன. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அண்மையில் வெளியிட்ட பொருளாதார அறிக்கையின்படி, 2025-ம் நிதியாண்டின் GDP 6.3% ஆக இருக்கும் என கணித்துள்ளது. இது ரிசர்வ் வங்கியின் கணிப்பை விட குறைவாகும். நேற்று நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டத்தில்,  GDP 6.6% ஆக இருக்குமென கணிக்கப்பட்டது. முன்னதாக, GDP மதிப்பு 7.2% ஆக இருக்குமென கூறிய ரிசர்வ் வங்கி தனது சொந்த கணக்கீட்டை குறைத்துள்ளது. 2025-ம் நிதியாண்டின் 2-ம் காலாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சியானது 5.4% ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த 7 காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைவாகும். பொருளாதார முன்னேற்றங்களைக் கண்காணிப்பதில் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை எஸ்பிஐ அறிக்கை வலியுறுத்தியிள்ளது. குறுகிய கால கடன்களுக்கான வட்டி…

Read More

சுங்க வரி ரத்து மற்றும் ஜிஎஸ்டி குறைப்பினால் மருந்து உற்பத்தியாளர்கள் 3 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் விலையை குறைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய ரசாயனம், உரத்துறை இணையமைச்சர் அனுப்பிரியா படேல், மத்திய அரசு Trastuzumab Deruxtecan, Osimertinib, and Durvalumab  ஆகிய மூன்று புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான சுங்க வரியை முற்றிலுமாக நீக்கியுள்ளதாகவும், கடந்த அக்டோபர் மாதம் முதல் இந்த புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரிவிகிதங்கள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதாலும், சுங்க வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதாலும், அதன் பலனை நுகர்வோருக்கு வழங்க விலையை குறைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டதாகவும், இந்த அறிவிப்புக்கு இணங்க, உற்பத்தியாளர்கள் இந்த மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை குறைத்து தகவல்களை தாக்கல் செய்ததாகவும், அனுப்பிரியா படேல் தெரிவித்தார். முன்னதாக,  புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் நிதிச்சுமையைக் குறைக்க மூன்று புற்றுநோய் எதிர்ப்பு…

Read More

சந்தையின் முதுகெலும்பாக கருதப்படும் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் நுகர்வு குறைந்துள்ளது. கன்டார் என்ற சந்தை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட India at Crossroads அறிக்கையின்படி,  கொரோனாவுக்கு பிந்தைய நடவடிக்கைகளால் நடுத்தர வர்க்கத்தின் பொருளாதாரம் அழுத்தத்தை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்குப் பிறகு, பொருளாதார மாற்றங்கள் மற்றும் தேக்கநிலை  நகர்ப்புற நுகர்வு மீது கணிசமான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், கிராமப்புறங்களுடன் ஒப்பிடும்போது நகர்ப்புற நுகர்வு குறைந்துள்ளதாகவும், அறிக்கை கூறுகிறது. 2025-ம் ஆண்டில் இந்தியாவின் சந்தைப்படுத்தல் உத்திகளை வடிவமைக்கும் முக்கிய சமூக-பொருளாதார மற்றும் நுகர்வோர் போக்குகளை இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இந்த அறிக்கையின்படி,  டிசம்பர் 2022-ல் 38% ஆக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள், 2024 ஜூலையில் 43% ஆகவும், இணைய வர்த்தக டெலிவரி 14%-லிருந்து 23% ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் நுகர்வை அதிகரிக்க நிறுவனங்கள் தங்களது திட்டங்களை மறுவரையறை செய்ய வேண்டிய தேவை உள்ளதாகவும் கன்டார் நிறுவன ஆராய்ச்சி அறிக்கை தெரிவித்துள்ளது.

Read More

தமிழகத்தில் வரும் 11,12 ஆகிய தேதிகளில் டெல்டாவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதனால், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தெரிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 12-ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை- தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 11-ம் தேதி மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 12-ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம்,…

Read More

இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவடைந்தது. இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 56.74 புள்ளிகள் குறைந்து 81,709.12 புள்ளிகளாகவும், நிஃப்டி 35.85 புள்ளிகள் குறைந்து 24,672.55 புள்ளிகளாகவும் நிலைபெற்றது. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம் மாற்றமின்றி தொடரும் என அறிவித்த நிலையில், சென்செக்ஸ், நிஃப்டி சரிவை சந்தித்தது. துறை வாரியாக, ஐடி மற்றும் ஊடகம் தவிர மற்ற அனைத்து குறியீடுகளும் உயர்ந்து முடிவடைந்தன. நிஃப்டியில் டாடா மோட்டார்ஸ் 3.21 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ 2.34 சதவீதமும், ஆக்சிஸ் வங்கி 1.50 சதவீதமும், பிபிசிஎல் 1.28 சதவீதமும், டாக்டர் ரெட்டிஸ் லேப் 1.10 சதவீதமும் உயர்ந்தன. மாறாக, அதானி போர்ட்ஸ் (-1.51 சதவீதம்), சிப்லா (-1.42 சதவீதம்), பார்தி ஏர்டெல் (-1.09 சதவீதம்), ஹெச்டிஎஃப்சி லைஃப் (-1.08 சதவீதம்), மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி (-0.99 சதவீதம்) ஆகியவை சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தையில் 4,088…

Read More

வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதையடுத்து,  செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதம் 6.5% ஆக தொடருமென தெரிவித்தார். தொடர்ந்து 11-வது முறையாக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை. கடைசியாக 2023 பிப்ரவரியில் ரெப்போ விகிதங்களை 6.5% ஆக  உயர்த்தியது உயர் பணவீக்கம் மற்றும் ஜிடிபி சரிவுக்கு மத்தியில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவீதமாக வைத்துள்ளதாக சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டார்.  வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில் பணவீக்கம் 4% என்ற அளவில் இருப்பதில் கவனம் செலுத்தவும் நிதிக் கொள்கைக் குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பொருளாதாரம் முன்னேற்றத்தை நோக்கி நிலையான மற்றும் சீரான பாதையில் சென்று…

Read More

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ரூ. 6000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. ‘புராஜெக்ட் ஸ்ட்ரெயிட்லைட்’ என்ற பெயரில் இந்தியாவில் ரூ. 6000 கோடியை ஒன்பிளஸ் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணியில் உள்ள ஒன்பிளஸ் நிறுவனம், வணிகத்தை மேலும் வலுப்படுத்தவும்,  வாடிக்கையாளர்களுக்கான சேவையை மேம்படுத்தவும் ஒன்பிளஸ் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.. பொருள்களின் தரம், வாடிக்கையாளர் சேவை மேம்பாடு, இந்திய சந்தைகளுக்கு ஏற்ப அம்சங்களை மேம்படுத்துவது ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளதாக  ஒன்பிளஸ் நிறுவனம் தெரித்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் இந்திய சந்தைகளில் தங்கள் வணிகத்தை வலுவாக்கவும், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தவும், ஒன்பிளஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2026-ம் ஆண்டுக்குள் தங்கள் சேவை மையங்களின் எண்ணிக்கையை 50% அதிகரிக்கவும், அதில் 22% இந்த ஆண்டு இறுதிக்குள்ளேயே எட்டவும் ஒன்பிளஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது.

Read More

ஆப்பிரிக்காவில் மர்மக் காய்ச்சலுக்கு இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர். காங்கோவில் காய்ச்சல் அறிகுறிகளுடன் கூடிய நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த 20 நாட்களில் 300-க்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மர்ம நோய் காய்ச்சல், தலைவலி, இருமல், சுவாசப் பிரச்சினை மற்றும் இரத்த சோகை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துவதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இறந்தவர்களில் பெரும்பாலானோர் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், மர்ம காய்ச்சல் தொடர்பாக மக்கள்  விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவவும், மக்கள் கூடுவதை தவிர்க்கவும், இறந்தவர்களின் உடல்களை தொடுவதை தவிர்க்கவும் மக்களை வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து ஆய்வு மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பின் குழு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More