Author: Porulaathaaram Post

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவை மத்திய அரசு நியமனம்  செய்துள்ளது. தற்போதைய ஆளுநர் சக்திகாந்த தாஸ் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி  பதவியேற்றார். அவரது மூன்று ஆண்டு கால பதவிக்காலம் நிறைவடைந்தபோது, அவரது  பணிக்காலத்தை மத்திய அரசு நீட்டித்தது. நாளையுடன் அவரது பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் மீண்டும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், தற்போது மத்திய வருவாய்த்துறை செயலராக உள்ள சஞ்சய் மல்ஹோத்ராவை  ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது. இவர் வரும் 11-ம் தேதி ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக பதவியேற்கவுள்ளார். 1990ஆ-ம் ஆண்டு ராஜஸ்தான் பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சய் மல்கோத்ரா,   ஐஐடி-கான்பூரில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்றவர். பிறகு அமெரிக்காவில் உள்ள பல்கலையில் பொதுக் கொள்கைப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். கடந்த 33 ஆண்டு காலத்தில், சஞ்சய் மல்ஹோத்ரா மத்திய அரசின்…

Read More

விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் முக்கிய விவசாயப் பொருளாதார நிபுணர்களுடன் மத்திய பட்ஜெட் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வரும் 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மதா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அப்போது, பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு தொகுப்பை அறிவிக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினர்.  இந்தியா முழுவதும் உள்ள விவசாயச் சந்தைகளில் ஒரே மாதிரியான வரிவிதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நிறுவன இணையதளங்களில் விவசாய இயந்திரங்களின் விலைகள் காட்டப்பட வேண்டும், மண்டி உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், அவசர காலங்களில் மட்டுமே குறைந்தபட்ச ஏற்றுமதி விலைகளை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாய சங்க பிரதிநிதிகள் முன்வைத்தனர். மேலும், பூச்சிக்கொல்லிகளின் மீதான ஜிஎஸ்டியை 18 சதவீதத்தில் இருந்து…

Read More

அமெரிக்காவில் 100 வயது ஆணும், 102 வயது பெண்ணும் திருமணம் செய்து கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளனர். பெர்னி லிட்மேன்- மார்ஜோரி பிடர்மேன் என்ற இந்த தம்பதி, பிலடெல்பியாவில் உள்ள அவர்களது வீட்டில் கடந்த 3-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். முதியோர் இல்லத்தில் எதேச்சையாக சந்தித்த இவர்கள், தங்களது இளமை பருவத்தில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்ததை அறித்தனர். பெர்னி என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மார்ஜோரி ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். இருவரும் குடும்பத்தோடு தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில், தங்களின் துணை இறந்த பிறகு பென்சில்வேனியாவுக்கு குடிபெயர்ந்தனர்.  முதியோர் இல்லத்தில் இருவரும் மீண்டும் சந்தித்த போது காதல் மலர்ந்துள்ளது. இதையறிந்த குடும்பத்தினர் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். பெர்னி லிட்மேனின் பேத்தியான சாரா சிசெர்மேன், இருவரும் தங்கள் முதல் திருமணத்தில் அவர்களது துணைகளுடன் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து வாழ்ந்த நிலையில், 100 வயதில் மீண்டும்…

Read More

சென்னை- பெங்களூரு இடையேயான ரயில் பயண நேரம் மேலும் ஒரு மணி நேரம் குறையவுள்ளது. சென்னை – பெங்களூரு இடையேயான ரயில் வழித்தடத்தை ஒரு முக்கியமான அதிவேக பாதையாக மாற்ற இரு மாநிலங்களும் உறுதியாக இருப்பதால், வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் 4.30 மணி நேரத்திலிருந்து மூன்று மணிநேரம் மற்றும் முப்பத்தைந்து நிமிடங்களாக குறையவுள்ளது. அதே நேரத்தில் சதாப்தியின் பயண நேரம் இருபது நிமிடங்களுக்கு மேல் குறையவுள்ளது. இதனை முன்னிட்டு, ஜோலார்பேட்டை-பெங்களூரு இடையேயான பயணத்தை விரைவுபடுத்தவும், அந்த வழியாக செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு நடைபெற்ற சோதனை ஓட்டத்தில் கே.எஸ்.ஆர்., பெங்களூருவில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்ட ரயில், 9.28 மணிக்கு ஜோலார்பேட்டை சென்றடைந்தது. பெங்களூரு-சென்னையின் பாதை மக்களுக்கு மட்டுமல்ல, வணிகத்திற்கும் முக்கியமானது. ஏனெனில் இது பொருளாதாரம், தொழில்நுட்பம், உற்பத்தி மையங்களையும் இணைக்கிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அதன் சோதனைகளின் போது அதிகபட்சமாக…

Read More

நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, காப்பீட்டுத் திருத்த மசோதாவில் முன்மொழியப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்களுக்கு ஆதரவளித்துள்ளது. காப்பீட்டுத்துறையின் திறன் மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, காப்பீட்டுத் துறையில் சீர்திருத்தங்களுக்கு நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த காப்பீட்டுத் திருத்த மசோதா பல முக்கிய மாற்றங்களை முன்மொழிகிறது. கூட்டு காப்பீடுகள் காப்பீட்டு நிறுவனங்கள் ஒரே உரிமத்தின் கீழ் ஆயுள் மற்றும் ஆயுள் அல்லாத காப்பீடுகளை வழங்க முடியும். அந்நிய முதலீட்டு வரம்பு அதிகரிப்பு முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களில் வெளிநாட்டு முதலீட்டு வரம்பை உயர்த்துவதும் அடங்கும். தற்போது 74% என நிர்ணயிக்கப்பட்டுள்ள அந்நிய முதலீட்டு வரம்பை 100% ஆக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  இந்த மாற்றம் காப்பீட்டுத் துறையில் அதிக வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது. சைபர் பாதுகாப்பு பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்க முன்மொழிவு சைபர் பாதுகாப்பு பாதுகாப்பு ஆணையத்தை…

Read More

2025-ம் நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) குறித்து நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவும், இந்திய ரிசர்வ் வங்கியும் வெளியிட்டுள்ள கணிப்புகள் கவலையளிக்கும் விதத்தில் உள்ளன. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அண்மையில் வெளியிட்ட பொருளாதார அறிக்கையின்படி, 2025-ம் நிதியாண்டின் GDP 6.3% ஆக இருக்கும் என கணித்துள்ளது. இது ரிசர்வ் வங்கியின் கணிப்பை விட குறைவாகும். நேற்று நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டத்தில்,  GDP 6.6% ஆக இருக்குமென கணிக்கப்பட்டது. முன்னதாக, GDP மதிப்பு 7.2% ஆக இருக்குமென கூறிய ரிசர்வ் வங்கி தனது சொந்த கணக்கீட்டை குறைத்துள்ளது. 2025-ம் நிதியாண்டின் 2-ம் காலாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சியானது 5.4% ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த 7 காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைவாகும். பொருளாதார முன்னேற்றங்களைக் கண்காணிப்பதில் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை எஸ்பிஐ அறிக்கை வலியுறுத்தியிள்ளது. குறுகிய கால கடன்களுக்கான வட்டி…

Read More

சுங்க வரி ரத்து மற்றும் ஜிஎஸ்டி குறைப்பினால் மருந்து உற்பத்தியாளர்கள் 3 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் விலையை குறைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய ரசாயனம், உரத்துறை இணையமைச்சர் அனுப்பிரியா படேல், மத்திய அரசு Trastuzumab Deruxtecan, Osimertinib, and Durvalumab  ஆகிய மூன்று புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான சுங்க வரியை முற்றிலுமாக நீக்கியுள்ளதாகவும், கடந்த அக்டோபர் மாதம் முதல் இந்த புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரிவிகிதங்கள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதாலும், சுங்க வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதாலும், அதன் பலனை நுகர்வோருக்கு வழங்க விலையை குறைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டதாகவும், இந்த அறிவிப்புக்கு இணங்க, உற்பத்தியாளர்கள் இந்த மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை குறைத்து தகவல்களை தாக்கல் செய்ததாகவும், அனுப்பிரியா படேல் தெரிவித்தார். முன்னதாக,  புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் நிதிச்சுமையைக் குறைக்க மூன்று புற்றுநோய் எதிர்ப்பு…

Read More

சந்தையின் முதுகெலும்பாக கருதப்படும் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் நுகர்வு குறைந்துள்ளது. கன்டார் என்ற சந்தை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட India at Crossroads அறிக்கையின்படி,  கொரோனாவுக்கு பிந்தைய நடவடிக்கைகளால் நடுத்தர வர்க்கத்தின் பொருளாதாரம் அழுத்தத்தை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்குப் பிறகு, பொருளாதார மாற்றங்கள் மற்றும் தேக்கநிலை  நகர்ப்புற நுகர்வு மீது கணிசமான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், கிராமப்புறங்களுடன் ஒப்பிடும்போது நகர்ப்புற நுகர்வு குறைந்துள்ளதாகவும், அறிக்கை கூறுகிறது. 2025-ம் ஆண்டில் இந்தியாவின் சந்தைப்படுத்தல் உத்திகளை வடிவமைக்கும் முக்கிய சமூக-பொருளாதார மற்றும் நுகர்வோர் போக்குகளை இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இந்த அறிக்கையின்படி,  டிசம்பர் 2022-ல் 38% ஆக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள், 2024 ஜூலையில் 43% ஆகவும், இணைய வர்த்தக டெலிவரி 14%-லிருந்து 23% ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் நுகர்வை அதிகரிக்க நிறுவனங்கள் தங்களது திட்டங்களை மறுவரையறை செய்ய வேண்டிய தேவை உள்ளதாகவும் கன்டார் நிறுவன ஆராய்ச்சி அறிக்கை தெரிவித்துள்ளது.

Read More

தமிழகத்தில் வரும் 11,12 ஆகிய தேதிகளில் டெல்டாவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதனால், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தெரிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 12-ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை- தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 11-ம் தேதி மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 12-ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம்,…

Read More

இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவடைந்தது. இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 56.74 புள்ளிகள் குறைந்து 81,709.12 புள்ளிகளாகவும், நிஃப்டி 35.85 புள்ளிகள் குறைந்து 24,672.55 புள்ளிகளாகவும் நிலைபெற்றது. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம் மாற்றமின்றி தொடரும் என அறிவித்த நிலையில், சென்செக்ஸ், நிஃப்டி சரிவை சந்தித்தது. துறை வாரியாக, ஐடி மற்றும் ஊடகம் தவிர மற்ற அனைத்து குறியீடுகளும் உயர்ந்து முடிவடைந்தன. நிஃப்டியில் டாடா மோட்டார்ஸ் 3.21 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ 2.34 சதவீதமும், ஆக்சிஸ் வங்கி 1.50 சதவீதமும், பிபிசிஎல் 1.28 சதவீதமும், டாக்டர் ரெட்டிஸ் லேப் 1.10 சதவீதமும் உயர்ந்தன. மாறாக, அதானி போர்ட்ஸ் (-1.51 சதவீதம்), சிப்லா (-1.42 சதவீதம்), பார்தி ஏர்டெல் (-1.09 சதவீதம்), ஹெச்டிஎஃப்சி லைஃப் (-1.08 சதவீதம்), மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி (-0.99 சதவீதம்) ஆகியவை சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தையில் 4,088…

Read More