இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென வோக்ஹார்ட் நிறுவனர் ஹபில் கோராகிவாலா கோரிக்கை விடுத்துள்ளார். வோக்ஹார்ட் என்பது மும்பையை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமாகும். பயோடெக்னாலஜி துறையின் ஒரு பிரிவான பயோடெக்னாலஜி தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சிலின் ஆதரவுடன் “நஃபித்ரோமைசின்” என்ற ஆன்டிபயாடிக் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து வோக்ஹார்ட் நிறுவனத்தால் “மிக்னாஃப்” என்ற வர்த்தக பெயரில் சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. இதன் அறிமுக விழாவில் பேசிய வோக்ஹார்ட் நிறுவனர் ஹபில் கோராகிவாலா, சில மருந்துகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகும், சில மருந்துகளுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார். நோயாளிகளுக்கு மருந்துகள் மலிவு விலையில் விற்பதை உறுதி செய்ய இந்தியாவில் கண்டிபிடிக்கப்பட்ட ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், தான் அவருடைய நிலையில் இருந்திருந்தால் இதே கோரிக்கை விடுத்திருப்பேன் என்று கூறினார்.
Author: Porulaathaaram Post
2022 ஏலத்தில் 5ஜி ஸ்பெக்ட்ரமை வாங்கிய அதானியின் நிறுவனம் அதனை திருப்பி ஒப்படைக்கவுள்ளது. 2022 ஜூலையில் நடைபெற்ற 400 மெகா ஹெர்ட்ஸ் ஏலத்தில், அதானி டேட்டா நெட்வொர்க்குகள் 26 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரமை ஏலத்திற்கு எடுத்தது. அப்போதுதான் முதன்முறையாக 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் 26 ஜிகாஹெர்ட்ஸ் 5ஜி ஸ்பெக்ட்ரமை வாங்கிய அதானி எண்டர்பிரைசஸின் துணை நிறுவனமான அதானி டேட்டா நெட்வொர்க்குகள், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அதனை பயன்படுத்தாத நிலையில், அவற்றை திருப்பி ஒப்படைக்கவுள்ளது. எதற்காக அதனை திருப்பி ஒப்படைக்கவுள்ளது என்பதற்கான காரணம் தெரியவில்லை. ஸ்பெக்ட்ரமை தனது சொந்த பயன்பாட்டிற்காக பயன்படுத்தவுள்ளதாக அதானி நிறுவனம் கூறியிருந்தது. இது தொடர்பாக அதானி நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஸ்பெக்ட்ரமை ஏலத்தில் எடுத்த ஓராண்டுக்குள் சேவையை தொடங்கவேண்டும் என்பது ஏலத்தில் பங்கேற்ற நிறுவனங்களுக்கான விதியாகும். அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் முதல் 13 வாரங்களுக்கு வாரத்திற்கு ரூ. 1 லட்சமும், அடுத்த 13 வாரங்களுக்கு வாரத்திற்கு…
பிற சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளை தேசிய பங்குச்சந்தை(NSE)யில் நேரடியாக பட்டியலிடுவதற்கான விதிகள் திருத்தப்பட்டுள்ளன. பிற சந்தைகளில் இருந்து பட்டியலிடப்படவுள்ள நிறுவனங்களின் குறைந்தபட்ச நிகர மதிப்பை ரூ.10 கோடியிலிருந்து ரூ.75 கோடியாக தேசிய பங்குச்சந்தை உயர்த்தியுள்ளது. இல்லையெனில், தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்வதற்கு ஆறு மாதங்களுக்கு முன், 1,500 கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மூலதனம் வைத்திருக்க வேண்டும் அதேபோல், ஒரு நிறுவனம் ரூ.1,000 கோடி வருவாய் ஈட்ட வேண்டும் என்றும் என்எஸ்இ கூறியுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரஉள்ளன. குறைந்தபட்ச நிகர மதிப்பு தேவை, குறைந்தபட்ச பொது பங்குதாரர்களின் எண்ணிக்கை தொடர்பான விதிமுறைகளையும் தேசிய பங்குச்சந்தை மாற்றியமைத்துள்ளது. அதேபோல், செலுத்தப்பட்ட மூலதனத்திற்கான விதிமுறை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய விதிமுறைகளின்படி, ஒரு நிறுவனத்திற்கு தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு குறைந்தபட்சம் ரூ.10 கோடி செலுத்தப்பட்ட மூலதனம் இருக்க வேண்டும்.ஆனால், இப்போது, ஒரு நிறுவனம்…
சீன எஃகு இறக்குமதிக்கு தற்காலிக வரி விதிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக JSW குழுமத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் கூறியுள்ளார். பெங்களுருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய JSW குழும தலைவர் சஜ்ஜன் ஜிண்டால், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் சீன எஃகு இந்தியாவிற்குள் வருவதைத் தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். சீன எஃகு நாட்டில் அதிக அளவில் இறக்குமதி செய்வதை தடுக்க, தற்காலிக வரி விதிக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். சீன எஃகு இறக்குமதியால் இந்திய எஃகு ஆலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அரசின் தரவுகளின் படி, கடந்த ஏப்ரல்-அக்டோபர் இடைப்பட்ட மாதங்களில் நாட்டின் எஃகு இறக்குமதியானது, ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.7 மில்லியன் மெட்ரிக் டன்னை எட்டியுள்ளது. தங்களது கோரிக்கையை மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாகவும், அரசிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றும் சஜ்ஜன்…
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, தங்கத்தின் விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது. கடந்த 2 தினங்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 900 ரூபாய் அதிகரித்துள்ளது. பொதுவாகவே தங்கத்தின் விலையை, சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளே இணைந்து தீர்மானிக்கின்றன. எளிதாக சொல்ல வேண்டுமென்றால் சந்தை நிலவரம் வலுவாக இருக்கும்போது தங்கத்தின் விலை குறையும். உலக சந்தைகள் நிலையாக இருந்தால் தங்கத்தின் தேவை மற்றும் அதன் விளைவாக, அதன் விலை குறைகிறது. ஏனெனில் பணவீக்கம் அதிகரிக்கும்போதும், சந்தை நிலவரம் நிலையற்றதாகவும் இருக்கும்போதும் முதலீட்டாளர்கள் தங்கத்தை தேடுவது கணிசமாக அதிகரிக்கும். அதேபோல் அமெரிக்க டாலரின் மதிப்பும் தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதே சமயம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும், உள்நாட்டு தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரூபாயின் மதிப்பு வலுவாக இருக்கும்போது, தங்கத்தின் விலை குறைகிறது. இப்போது தங்கம் வாங்க சரியான நேரமா…
ஐபிஎல்-லில் டெல்லி அணி தன்னை தக்கவைக்காதது குறித்து ரிஷப் பண்ட் மனம் திறந்துள்ளார். 18-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி 2025 மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் வரும் 24, 25 ஆகிய இரு நாட்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க 1,165 இந்தியர்கள் மற்றும் 409 வெளிநாட்டவர்கள் என மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த தொடருக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து விலகிய ரிஷப் பண்ட், தன்னை அந்த அணி தக்கவைக்காததற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் தான் ஏலத்தில் பங்கேற்க பணம் ஒரு காரணம் அல்ல என்றும் கூறியுள்ளார். ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து விடுவிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த சுனில் கவாஸ்கர், சம்பளம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரிஷப் பண்ட் டெல்லி அணியை விட்டு…
நிலையற்ற தன்மை கொண்டதாக பார்க்கப்பட்ட க்ரிப்டோகரன்சி தற்போது தங்கத்திற்கு மாற்றான முதலீடாக பார்க்கப்படுகிறது. அதிக ஆதரவு மற்றும் வருமானம் இருந்தாலும், பிட் காயினில் நிலையற்ற தன்மை உள்ளிட்ட சவால்கள் இருந்தன. இருந்தபோதிலும், தற்போது தங்கத்திற்கான மாற்றாக பிட்காயின் பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாக, கிரிப்டோகரன்ஸிகள் விவாதத்திற்கு உரியவையாகவே உள்ளன. அதிலும் குறிப்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்ற பிறகு, மக்களுக்கு கிரிப்டோகரன்ஸிகள் மீதான பார்வை மாறியுள்ளது. ஏனெனில் ட்ரம்ப் கிரிப்டோகரன்சி ஆதரவு நிலைப்பாடு கொண்டவர். அவரது சமீபத்திய கருத்துக்கள் கிரிப்டோகரன்சி மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துகின்றன. பல ஆண்டுகளாக , தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. மேலும், பணவீக்கத்திற்கு எதிராகவும், பொருளாதார நிச்சயமற்ற காலங்களில் பாதுகாப்பான முதலீடாகவும் மதிக்கப்படுகிறது. பிட்காயின் ஆரம்பத்தில் ஏற்ற இறக்கம் கொண்ட சொத்தாகக் காணப்பட்டாலும், அது இப்போது தங்கத்துடன் ஒப்பிடப்படுகிறது. பாதுகாப்பான சொத்தான பார்க்கப்படுகிறது. அமெரிக்க டாலர் போன்ற பாரம்பரிய சொத்துக்களுக்கு மாற்றாக பிட்காயின்…
அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் தங்களது நாட்டின் பிரையன்ஸ்க் பகுதியில் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டை உக்ரைன் தற்போது வரை மறுக்கவில்லை. இந்த தாக்குதலால் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கி 1,000 நாட்கள் நிறைவடைந்துள்ளது. ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவி வழங்கி வந்தன. நீண்ட தூரம் சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி இருந்தது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், தங்கள் வழங்கிய ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு பைடன் அனுமதி வழங்கியுள்ளார். இந்த ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தினால் ரஷ்யாவுக்கு தீவிர பாதிப்பு ஏற்படும். ரஷ்யா மீது தாக்குதல் மேற்கொண்டால், பதிலுக்கு தாங்களும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த நேரிடும் என்று ரஷ்யா தரப்பில்…
இந்தியா – பிரிட்டன் இடையேயான பொருளாதார உறவுகளை மாற்றியமைக்கக்கூடிய முக்கிய வர்த்தக ஒப்பந்தமான பிரிட்டன் – இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 2025-ம் ஆண்டில் தொடக்கத்தில் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது. பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையேயான உயர்மட்ட சந்திப்பிற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. G-20 உச்சி மாநாட்டின் போது இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். இந்த ஒப்பந்தம் வர்த்தகத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் பாதுகாப்பு, தொழில்நுட்பம், கல்வி மற்றும் காலநிலை மாற்றம் போன்ற துறைகளில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வாக்குறுதிகளை கொண்டுள்ளது. 2022 ஜனவரியிலேயே இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கினாலும், இரு நாடுகளிலும் தேர்தல் நடைபெற்றதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் இரு பிரதமர்களும் உறுதியாக உள்ளதால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒப்பந்தம் முடிவடையும் என்ற நம்பிக்கை உள்ளது. 2023-24 நிலவரப்படி, இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகம் 21.34 பில்லியன் டாலரை எட்டியது. இது…
மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பங்குச்சந்தைக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தை மற்றும் கமாடிட்டி வர்த்தகம் நடைபெறாது. இருப்பினும், கமாடிட்டியில் மாலை 5 மணி முதல் இரவு 11:55 மணி வரை (குறிப்பிட்ட சில அக்ரி கமாடிட்டி சந்தை இரவு 09:00 மணி வரை இயங்கும்) வர்த்தகம் மீண்டும் தொடங்கும். கடந்த 7 நாட்களாக வீழ்ச்சி அடைந்து வந்த பங்குச்சந்தை, இன்றைய வர்த்தக நேர முடிவில் சிறிது ஏற்றத்தோடு முடிவடைந்தது. இதனால் முதலீட்டாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். நவம்பர் மாதத்தில் 3-வது நாளாக வர்த்தக நாளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தீபாவளி, குருநானக் ஜெயந்தியை ஒட்டி, இரு தினங்கள் பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தீபாவளியன்று சிறப்பு நேரமாக ஒரு மணி நேரம் மட்டும் பங்குச்சந்தை இயங்கியது. இதன் பிறகு டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படும். இது 2024ம் ஆண்டின் இறுதி விடுமுறை…