ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.
தற்போதைய ஆளுநர் சக்திகாந்த தாஸ் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி பதவியேற்றார். அவரது மூன்று ஆண்டு கால பதவிக்காலம் நிறைவடைந்தபோது, அவரது பணிக்காலத்தை மத்திய அரசு நீட்டித்தது. நாளையுடன் அவரது பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் மீண்டும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால், தற்போது மத்திய வருவாய்த்துறை செயலராக உள்ள சஞ்சய் மல்ஹோத்ராவை ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது. இவர் வரும் 11-ம் தேதி ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக பதவியேற்கவுள்ளார்.
1990ஆ-ம் ஆண்டு ராஜஸ்தான் பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சய் மல்கோத்ரா, ஐஐடி-கான்பூரில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்றவர். பிறகு அமெரிக்காவில் உள்ள பல்கலையில் பொதுக் கொள்கைப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். கடந்த 33 ஆண்டு காலத்தில், சஞ்சய் மல்ஹோத்ரா மத்திய அரசின் எரிசக்தி, நிதி, தகவல் தொடர்பு மற்றும் சுரங்கத் துறை என பல துறைகளில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.